தமிழகப் புயலில் சிக்கி 6 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் புயலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
புயலால் நெற்பயிற்கள் நாசமடைந்தன. பல மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சரிந்தன.
தஞ்சாவூரிலிருந்து கிடைத்த செய்திகளின் படி, இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் முறையே நாகப்பட்டினம் மற்றும்திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி:
திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் முதிய பெண் ஒருவர் இறந்தார்.
சீர்காழி, பாபநாசம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
திருவாரூரில் 3 பேர் பலி:
திருவாரூர் மாவட்டம் பனயம்சேரி பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
மூன்று மாவட்டங்கள் கடும் பாதிப்பு:
தமிழகம்-ஆந்திரப் பிரதேசம் இடையே கடலூர் அருகே புதன்கிழமை கரையைக் கடந்த கடும் புயலால் கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களும், பாண்டிச்சேரி மாநிலமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சென்னை அருகே வங்கக் கடலில் உருவான புயல் புதன்கிழமை பிற்பகல் கரையைக் கடந்தது.
சூறாவளி:
இந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தது. கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பக்கத்தில்ஞானசேகரன் (32) என்பவர் உள்பட 8 பேர் மரங்கள் விழந்ததில் காயமடைந்தனர்.
1000 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் கூரைகளும், ஓடுகளும் சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
புதுவையில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய போதும் கன மழை இல்லை. பல இடங்களில் மிதமானமற்றும் பலத்த மழை தான் இருந்தது.
போக்குவரத்து பாதிப்பு:
சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து கிடப்பதால் கடலூரில் இருந்து சிதம்பரம், புதுவை, விருத்தாசலம் உள்படபல்வேறு ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குள்ளச்சாவடி-வடலூர் பகுதியில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் - கடலூர் இடையே ரயில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து, கடலூர் வழியாக சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்குவந்தது.
அது அங்கிருந்து புறப்பட்ட போது, வரகால்பட்டு ரயில் நிலையப் பாதையில் ஏராளமான மரங்கள் தண்டவாளத்தில்விழுந்து கிடந்தன. அதனால் 2 கி.மீ.வேகத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை நிவர்த்தி செய்வதற்காக வருவாய்த்துறை, காவல்துறை,தீயணைப்புத் துறையினர் நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊருக்குள் கடல்நீர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் நீர் புகுந்தது. மரக்காணம் அருகே 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர்புகுந்தது. அப்பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீனவர்களைக் காணவில்லை:
கடலூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மீன் பிடிக்கச் சென்ற 20 மீனவர்களின் கதி என்ன என்றுதெரியவில்லை.
வியாழனும் விடுமுறை:
புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் வியாழக்கிழமையும் அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பள்ளிகளுக்கு வியாழக்கிழமையும்விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுவையில் சேதம்:
புயல் காரணமாக புதுவையில் சூறாவளிக் காற்று வீசியது. சில இடங்களில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.இச்சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சூறாவளிக் காற்றால் புதுவை மற்றும் கிராமப்பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. துணைநிலைஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, பாரதி பூங்கா, தலைமை அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள்சாய்ந்தன.
செயலிழந்த தொலைபேசிகள்:
புதுவையில் பலத்த சூறாவளிக் காற்றினால் தொலைபேசி இணைப்புக்கள் செயலிழந்தன. சாலையில் மரங்கள்விழுந்து கிடப்பதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புதுவையில் பலத்த மழைபெய்யவில்லை. இருப்பினும் கடும் சூறாவளிக் காற்று வீசியது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications