சிறந்த தலைவராக வாஜ்பாயைத் தேர்ந்தெடுத்த சீன மக்கள்
பீஜிங்:
உலகில் மிகச் சிறந்த 21 பெரிய தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் வாஜ்பாயையும் சீன மக்கள் தேர்வுசெய்துள்ளனர்.
சீனாவின் பிரில்லியன்ட் சைனீஸ் என்ற பத்திரிக்கை தனது வாசகர்களிடம் இன்டர்நெட் மூலமாக கருத்து கணிப்புநடத்தியது.
இதில் உலகின் 300 முக்கிய அரசியல் தலைவர்களில் 21 பேரை தேர்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அந்தகருத்துக் கணிப்பில், இந்திய பிரதமர் வாஜ்பாயும் சிறந்த தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சீன அதிபர் ஜியாங் செமின், அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின் ஆகியோரும் அடங்குவர்.
வாஜ்பாய் கடந்த 50 ஆண்டுகளாகவே இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்கத் தலைவராக இருந்து வருகிறார். பலதடைகளையும் தாண்டி இந்தியாவின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என சீன மக்கள் கருத்துகூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications