அமைதியை சீர்குலைக்க வேண்டாம்: பாக்.கை எச்சரிக்கிறது இந்தியா
டெல்லி:
காஷ்மீரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க பாகிஸ்தான் முயன்றால் அதன் முயற்சிகளை இந்தியா முறியடிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கூறியுள்ளார்.
லோக்சபாவில் புகன்கிழமையன்று வெளியறவுத்துறை அமைச்சர் பேசியதாவது:
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முயன்று வருகிறது. தீவிரவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் இந்தியா தயாராக இருக்கிறது.ரம்ஜான் மாதத்தில் தாக்குதலை நிறுத்துமாறு ராணுவமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமைதிக்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டால் அதன் முயற்சிகளை இந்தியா முறியடிக்கும். எல்லைப் பகுதியில் தீவிரவாதத்தைதூண்டும் பாகிஸ்தானின் செயல்கள் சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
பாகிஸ்தான் தீவிரவாத்தை ஆதரித்து ஊக்குவிப்பதை பல நாடுகள் உணர்ந்துள்ளன. பாகிஸ்தானின் செயல்கள் இந்தியாவின் பாதுகாப்பு அபாயம்ஏற்படுத்துவதாகத்தான் இருக்கிறது என அவர் பேசினார்.