புயலில் சிதம்பரம் கோவில் கோபுர கலசங்கள் சேதம்
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சூறாவளி காற்றின் வேகத்தால் சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுர கலசங்கள் கீழே விழுந்து நொறுங்கியது.
புதன்கிழமை சிதம்பரத்தில் மிக வேகமாக காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்தன. இங்கு இருக்கும் புகழ் பெற்றநடராஜர் கோயிலின் 200 அடி உயரத்திலுள்ள கோபுரத்திலிருந்து செப்புக் கலசங்கள் பறந்து கீழே விழுந்தன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 கோபுரங்கள் இருக்கின்றன. வடக்கு சன்னிதியில் இருக்கும் கோபுரத்திலிருந்த 3 கலசங்களும், கிழக்கு சன்னிதியிலிருந்து2 கலசங்களும் காற்றில் கீழே விழுந்து நொறுங்கின.
பல நூற்றாண்டு பழமையான, பெருமை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரகலசம் கீழே விழுந்து நொறுங்கியிருப்பது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications