பஞ்சாப் தந்த டீன் ஏஜ் தென்றல்
லண்டன்:
2000 மாவது ஆண்டின் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரியங்கா பஞ்சாப் மாநிலத்திலுள்ளலூதியானாவைச் சேர்ந்தவர். இன்னும் டீன்ஏஜ் தாண்டாமல் 18 வயதிலேயே இருக்கும் நாகரிகத்தின் சின்னம்.
அழகி சோப்ராவுக்கு கலையிலும், சமூக சேவையிலும் மிகுந்த நாட்டமாம். 18 வயதான இந்தப் பருவ மங்கைக்குஇசை, நாட்டியம் எல்லாம் அத்துப்படி. கவிதைகள் எழுதுவதிலும் சாதனை படைத்திருக்கிறார்.
புத்தகங்கள், பத்திரிக்கைகள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் இவர் மிகவும் விரும்பிப் படிப்பது சுயசரிதைகள்தான்.
மிஸ் வேர்ல்டு போட்டியில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வது பெண் இவர். ஏற்கனவே கடந்தஆண்டுகளில் ரீட்டா பரியா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹைடன் மற்றும் யுக்தா முகி ஆகியோர் மிஸ் வேர்ல்டாகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
1982 ம் வருடம் ஜூலை 18 ம் தேதி பிறந்த ப்ரியங்கா சோப்ரா ஆளை மயக்கும் மெல்லிய அட்டகாசமானபுன்னகைக்குச் சொந்தக்காரர். 5.7 அடி உயரமுடையவர்.
அழகிக்குப் பிடித்த சமாச்சாரங்கள்:
நீல நிறம் மேல் தீராக் காதல் கொண்ட இவருக்கு சாக்லேட் என்றால் கொள்ளைப் பிரியமாம். மேலும் ஓய்வுநாட்களில் ஹாயாக சர்ச்சுகள், மருத்துவமனைகள், குழந்தைகள் நலக் காப்பகங்களுக்குச் சென்று அவர்களுடன்கொஞ்சிப் பேசி மகிழ்வடைவாராம்.
ஹிந்திப் படங்களில் நடிக்க விருப்பமாம்.
தமிழ் சினிமா டைரக்டர் சங்கரின் அடுத்த குறி இவராகவும் இருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications