டிச.5 ம் தேதி போஸ்ட் மாஸ்டர்கள் வேலை நிறுத்தம்
சென்னை:
பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போஸ்ட் மாஸ்டர்கள் இம்மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகஅறிவித்துள்ளனர்.
இது பற்றி அகில இந்திய போஸ்ட் மாஸ்டர்கள் சங்கத்தின் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கயிைல் கூறியிருப்பதாவது:
கடந்த முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, மத்திய அரசு அளித்த உறுதி மொழிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. சம்பள உயர்வும்அளிக்கப்படவில்லை.
ஐந்தாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை அரசு நடை முறைப்படுத்தாமல் இருக்கிறது. இந்த காரணங்களால் நாங்கள் வேலை நிறுத்த்ததில் ஈடுபடநிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் நிறை வேற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் நிறை வேற்றப்படவில்லை. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. அதற்கான நடவடிக்கையிலும்ஈடுபடவில்லை.
எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 5-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications