புயல் மழை: சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்வு
சென்னை:
தமிழகத்தை தாக்கிய புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் இரண்டு நாட்களுக்கு முன்னால் கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பலத்த சேதம்ஏற்பட்டது.
இந்த புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பனஞ்சேரி கிராமத்தில் மின்சாரம்தாக்கியதால் ஒரு குழந்தை உள்பட 3 பேர் இறந்தனர்.
நெல்லிக்குப்பத்தில் புயல் காற்றில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் குழந்தை உள்ளிட்ட இரண்டு பேர் பலியானார்கள்.
சிதம்பரம் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் மரம் விழுந்ததில் ஒருவர் நசுங்கி இறந்தார். மங்களூரைச் சேர்ந்த ப்ரியா (12), ஆலம்பாடியைச் சேர்ந்தசேகர் (32) ஆகியோர் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததால் இறந்தனர்.
பெண்னாடத்தில் வசித்து வரும் மகேஷ் (27) மோட்டார் பைக்கில் செல்லும் போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
புயல் மழையால் மட்டும் கடலூரில் இதுவரை 75 -க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மரங்கள் சுவர்கள் இடிந்து விழுந்ததில்80-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications