யாழ்ப்பாணத்தில் வீரப்பன்?
பெங்களூர்:
வீரப்பன் யாழ்ப்பாணத்துக்குத் தப்பித்துச் சென்று விட்டானா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை அமைச்சர் ரெக்கி ரணதுங்காபெங்களூரில் வெள்ளிக்கிழமை கூறினார்.
ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின், வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அரசுகள் அதிரடிப்படை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்தநிலையில் வீரப்பன் இலங்கை யாழ்ப்பாணத்துக்குத் தப்பித்துச் சென்று விட்டான் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை பெங்களூர் வந்த இலங்கை அமைச்சர் ரெக்கி ரண துங்கா நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
வீரப்பன் சத்தியமங்கலம் காட்டிலிருந்து தப்பித்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று விட்டார் என்று வதந்தி பரவியுள்ளது. ஆனால் அதுகுறித்து எனக்கு எதுவும்தெரியாது.
வீரப்பனைப் பிடிப்பதில் இரு மாநில அரசுகளும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் முயற்சிக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
இலங்கையில் அமைதி ஏற்பட:
இலங்கையைத் துண்டாட விட மாட்டோம். நாட்டில் அமைதி ஏற்படுவதற்காக தொடர்ந்து போராடுவோம். இலங்கை வீரர்களின் இறுதிச் சொட்டுரத்தம் உள்ளவரைப் போராடுவோம். இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பை நாடுவோம் என்றார் ரண துங்கா.












Click it and Unblock the Notifications