காவலர் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு
சென்னை:
இந்த மாதம் 4-ம் தேதி நடை பெறுவதாக இருந்த காவலர் தேர்வு தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆண் காவலர்களுக்கான தேர்வு இந்த மாதம் 4-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆண் காவலர் தேர்வு தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . இந்த தேர்வு இந்தமாதம் 4-ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெறுவதாகஇருந்தது. ஆனால் இது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கான தேதிகள் பின்னர்அறிவிக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த மாதம் 4 மற்றும் 5-ம் தேதி நடை பெறுவதாக இருந்த இரண்டாம் நிலைகாவலரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முக தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வுக்கானதேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications