தர்மபுரி: சிறுமி வயிற்றில் கூழாங்கற்கள்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ஒரு சிறுமி விழுங்கிய 60 கூழாங்கற்களை ஆபரேஷனின்றி அகற்றி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நரிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரது மகள் கிரிஜா (6). கிரிஜா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார்.
இதற்கு முன் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அவர் குணமடையவில்லை. இந்நிலையில், சேலம் அம்மாபேட்டையில் உள்ள பழனியாண்டிமருத்துவமனைக்கு கிரிஜாவை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு எக்ஸ் ரே மூலம் வயிற்றில் கல் உள்ளதைக் கண்டறிந்தனர்.
இந்த கற்கள் சற்று பெரிய அளவில், கூழாங்கற்களாக இருந்தது. இந்த கற்களை ஆபரேஷனில்லாமல், அகற்ற டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்காகசில மருந்து மாத்திரைகளைக் கொடுத்தனர்.
ஒருவார காலச் சிகிச்சையில் அவரது வயிற்றில் இருந்த கற்கள் வெளியே வந்தது. சுமார் 60 கூழாங்கற்கள் இருந்ததையறிந்து டாக்டர்கள்வியப்படைந்தனர்.
இந்த சிறுமியின் பள்ளி ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு கூழாங்கற்களை விளையாட்டாக விழுங்கி வந்துள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலிஏற்பட்டுள்ளது.
இவரை பரிசோதனை செய்த டாக்டர் ஞானசேகரன், பிரகாசம் ஆகியோர் இந்த கற்களை அறுவை சிகிச்சையின்றி அகற்ற முடிவு செய்தனர். இதில்வெற்றியும் கண்டனர்.