For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெலிகாப்டர் மூலம் வீரப்பனைத் தேட முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சின்ன விஷயம் முதல் பெரிய விஷயம் வரை குரு என்கிற அங்கீகாரம் அவசியம். ஒரு குருவுக்குத் தேவையான சகல தகுதிகளும் நிரம்பப் பெற்றராமானுஜர் பக்குவம் பெறும் பொருட்டு பல்வேறு குருமார்களிடம் படியேறிப் பாடம் கேட்டார். விஷயங்களும் விவரங்களும் புத்தகத்தில் இருக்கும்.விவேகமும் வைராக்யமும் ஞானிகள் பழக்கத்தில்தான் வரும்.

சுகர் என்ற திருநாமம் உடைய சுகதேவர்வியாச மகரிஷியின் திருப்புதல்வர். பிறப்பிலேயே சகல ஞானமும் பெற்றவர். அவரது பெருமைக்கு ஒரு நிகழ்ச்சிசொல்கிறேன்.

நீர் நிலையில் நீராடிக் கொண்டிருந்த பெண்கள் வியாச மகரிஷி வருவதைக் கண்டு நாணினார்கள். ஆனால் அவரைக் காட்டிலும் இளைய, வாலிபரானசுகதேவர் வீயாசரின் மகன் வந்த போது வெட்கப்படவில்லை. அதிர்ந்து போனார் வியாசர்.

பெண்களே ... வயதான என்னைக் கண்டதும் நாணம் கொள்கிறீர்கள். வாலிபனான என் மகனைக் கண்டு நீங்கள் நாணப்படவில்லையே.... ஏன்?என்றார்.

பெண்களே என்று எம்மை அழைத்தீர்கள் அல்லவா அதுவே காரணம்! என்றார்கள் பெண்கள்.

நாங்கள் பெண்கள் என்ற பேத உணர்வு உம்மிடம் உள்ளது. ஆனால் சுகதேவர் இந்தர் பேத உணர்வு அற்றவர் என்றார்கள்.

அப்படிப்பட்ட மகான் சுகர். அவரை அழைத்து வியாசர் ஜனகரிடம் சீடனாகப் போகும்படி கட்டளை இட்டார் ... ஏன்? ஒரு குருவின் முத்திரை. அங்கீகாரம்சுகருக்குத் தேவை என்று தீர்மானித்து, சுக தேவரை ஜனகரிடம் அனுப்பினா.,

ஒரு நகரத்தின் ஆடம்பரத்தால் கிராமவாசிக்கு ஏற்பட வேண்டிய பிரமிப்பு சுகரிடம் தோன்றவில்லை. விசாலமான மாளிகை உப்பரிகையில், ராஜஅலங்காரத்துடன் இருந்த ஜனகரைத் தயக்கமின்றி நோக்கினார் சுகர். இருவருக்கும் நடந்த உரையாடலே ஒரு உபநிடதம் போல ......

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X