காஷ்மீர் பிரச்சனை தீர 3 நிபந்தனைகளை இந்தியா ஏற்க ஹிஸ்புல் கோரிக்கை
இஸ்லாமாபாத்:
இந்திய அரசு தங்களது மூன்று நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளும் வரை, ராணுவ வீரர்களை நோக்கிதீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதின்திங்கள்கிழமை கூறியுள்ளது.
ஹிஸ்புல் தீவிரவாத இயக்க செய்தித்தொடர்பாளர் சலீம் ஹாஸ்மி இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.
இதை நிறுத்த வேண்டுமானால், ஹிஸ்புல் முஜாஹிதினின் 3 நிபந்தனைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
காஷ்மீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் முத்தரப்புப்பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
மற்றும் தாங்கள் கோரும் சில தலைவர்களை ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும் ஆகியவையே ஹிஸ்புல்லின் 3நிபந்தனைகள்.
மேலும் காஷ்மீரில் தற்போது இந்திய அரசு அறிவித்துள்ள போர்நிறுத்தத்தை வரவேற்பதாகவும் அவர்தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாஹிதின் போர்நிறுத்தம் அறிவித்து வாபஸ் பெற்றதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.