புலிகள் ஆதரவு தமிழ் இயக்கங்கள் தடை செய்ய பரிந்துரை
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் இயக்கங்களை தடை செய்ய, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிதிங்கள்கிழமை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய விடுதலை இயக்கம், மற்றும் தமிழ் நாடு மீட்சிப் படை போன்றவற்றை தடை செய்ய வேண்டிய நிலைவந்தால் அவற்றை தடை செய்யுமாறு மத்திய அரசக்கு பரிநதுரை செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. மாவட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு முதல்வர் பேட்டியளித்தார்.பேட்டியில் அவர் கூறியதாவது:
தமிழ தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மீட்சிப்படை அமைப்பு ஆகிய தமிழ் அமைப்புகளைக் குறித்தும் கவலை கொள்ளத் தேவையில்லை.
ஏனென்றால் அந்த இயக்க்கள் ஒவ்வொன்றிலும் 5 அல்லது 6 பேர்தான் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் மாநில அரசு அந்த அமைப்புகளைதடை செய்ய பரிந்துரை செய்யும் என கூறினார்.
புலிகள் மீதான தடை தொடரும்:
ஆனால் முதல்வர் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என்றார். இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. மற்றும்பா.ம.க. கட்சிகள் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications