ஜாதகத்தால் பிரிந்த காதல் ஜோடி தற்கொலை
சூலூர்:
காதலுக்கு ஜாதி தடை விதிக்கவில்லை. பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விதியும் அவர்களைப்பிரிக்கவில்லை. ஆனால் ஜாதகம், ஜோதிடம் இருவரையும் இந்த உலகை விட்டே அனுப்பி விட்டது.
பெரும்பாலான காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்வது, பெற்றோர்களின் எதிர்ப்பால் தான். ஆனால்கோவையில் ஒரு காதல் ஜோடியை ஜோதிடம் இந்தப் புவியை விட்டே அனுப்பி விட்டது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கலங்களைச் சேர்ந்தவர் கந்தசாமி (25). அதே தெருவில் வசித்து வந்தமாறனின் மனைவி லட்சுமி (19). இவர்கள் இருவரும் ஒரே தெருவில் வசித்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும்இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் ஒரே தெருவில் வசித்து வந்தனர். இருவரும் ஒரே ஜாதி என்பதால் ஜாதியும் தடை விதிக்கவில்லை. அதேசமயம், பெற்றோர்களும் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
எனவே திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்க இரு தரப்பு பெற்றோர்களும் ஒப்புக் கொண்டனர். எனவேஇருவரது ஜாதகத்தையும் எடுத்துச் சென்று ஜோதிடம் பார்க்க ஜோதிடரிடம் சென்றனர். ஜோதிடர், இருவருக்கும்பொருத்தம் சரியில்லை. ஒருவரை ஒருவர் மறந்து விடுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
இதனால் மனம் உடைந்த இருவரும் திடீரென காணமல் போயினர். இவர்களைத் தேடி பெற்றோர்கள் பலஇடங்களில் அலைந்தனர். ஆனால் இருவரும் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதுதெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications