காதிபவனில் ரூ4.5 லட்சம் புடவைகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே காதி பவனில் இருந்த 112 பட்டுப் புடவைகள் திருட்டுப் போனது.இவற்றின் மதிப்பு ரூ 4.5 லட்சமாகும்.
ஈரோடு மாவட்டம், திம்மையநாயக்கன்புதூரில் காதி பவன் செயல்பட்டு வருகிறது.இங்கு விற்பனைக்காக 112 பட்டுப் புடவைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த புடவைகள் சரிபார்க்கப்பட்டு, காதிபவன் பூட்டப்பட்டது. மறுநாள் காலையில்கடையைத் திறந்து பார்த்தபோது 112 புடவைகளும் காணமல் போயிருந்தது.இவற்றின் மதிப்பு ரூ 4. 5லட்சமாகும். இது குறித்து காதி பவன் மேலாளர் போலீசில்புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications