வீரப்பனிடம் "சோலார் செல்போன்"

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

அதிரடிப்படையின் நடமாட்டத்தையும், வீரப்பனைப் பிடிக்க எடுக்கப்படும்முயிற்சிகளையும் அறிந்து கொள்ள வீரப்பன் சோலர் செல்போன் வைத்திருப்பதாகஉளவுப் பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு வீரப்பனைப் பிடிக்க அரசு தீவிர முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது. அதிரடிப்படையினர் காட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இவர்களின் நடமாட்டத்தை வீரப்பனது உளவுப் பிரிவினர் ரகசியமாகத் தகவல்அனுப்பி வருகின்றனர். இதற்கு சோலார் செல்போனை வீரப்பன் பயன்படுத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செல்போன் சூரிய ஒளியால் சார்ஜ் செய்யக் கூடியதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 80 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள இந்த போன்,பெங்களூரிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இது வரை ரேடியோ வழியாக செய்திகளை அறிந்து வந்த வீரப்பனுக்கு செல்போன்கிடைத்துள்ளது மிகவும் எளிதான வசதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த செல்போன் வழியாக அவன் உளவுப் பிரிவினர் அளிக்கும் செய்திகளைஉடனுக்குடன் அறிந்து, அதிரடிப்படையினர் நடமாட்டத்திற்கு தகுந்தவாறு தனதுஇருப்பிடத்தை வீரப்பன் மாற்றி வரக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+