தமிழ் தீவிரவாதிகள் வெப்தளம் கிளப்பிய புயல்
டெல்லி:
தமிழ் தீவிரவாதிகளின் இன்டர் நெட் வெப் தளம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.,க. அ.தி.மு.க.எம்.பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
லோக் சபாவில், வியாக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பின்பு அ..தி.மு.க. எம்.பி. மலைச்சாமி தமிழ் தீவிர வாதிகள்வெப்தளம் குறித்து பிரச்னை எழுப்பினார்.
அவர் பேசுகையில், தமிழர் விடுதலைப் படை எனும் அமைப்பு இன்டர் நெட்டில் புதிய வெப் தளம்தொடங்கியுள்ளது. இதில் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் பல தென்னிந்திய பகுதிகளை இனைத்து அகண்டதமிழகம்உருவாக்கப்போவதாக அந்த வெப் தளத்தில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கும் படியும் அந்த வெப் தளத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.
இதற்கு டி.ஆர். பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுத்ததால் அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
சபாநாயகர் பாலயோகி தலையிட்டு இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரமோத் மகாஜன் பதிலளிக்கவேண்டும் என கூறினார்.
பிரமோத் மகாஜன் கூறுகையில், இது போன்ற பிரிவினைவாத வெப் தளத்தை தடை செய்வதற்கு நடவடிக்கைகள்எடுக்கப்படும். அதற்கான உயர் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.
தீவிரவாதிகள் வெப்தளம் சட்டவிரோதமானது என தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வெப் தளம் இந்தியாவிலிருந்து செயல்படுகிறதா? அல்லது வெளிநாட்டிலிருந்து செயல்படுகிறதா எனதெரியவில்லை.அந்த வெப் தளத்தையும் நான் பார்க்கவில்லை.
வெப் தள உரிமையாளர்களோடு ஆட்சியில் இருப்பவர்களை இணைத்து பார்க்கக்கூடாது. கம்ப்யூட்டர்குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பது எளிதானதல்ல.
வெப் தளம் குறித்து முன்னாள் பிரதமர் சந்திரசேகர் சபாநாயகரிடம் சில தஸ்தாவேஜுகளை புதன்கிழமைகொடுத்துள்ளார். அது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்யும் என்றார்.
இதன் பின் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பேசுகையில், மந்திரியின் பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை.சபாநாயகர் தகவல் தொழில்நுட்பத்துறை, உள்துறை மற்றும் புலனாய்வுத்துறையின் கூட்டுக் கூட்டத்தை உடனேகூட்டி எடுக்க வேண்டிய நடவடி,க்கை குறித்து விசாரிக்க வேண்டும்.
நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பான விஷயம் இது. எனவே அலட்சியப்போக்கு கைவிடப்படவேண்டும்.
மத்திய அரசு தேசிய பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ளதாக தெரியவிலலை. நான் கொடுத்ததஸ்தாவேஜுகளை சபாநாயகரிடமிருந்து மத்திய அரசு பெற்று தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வெப்தளத்தை பார்த்து வருவதால் இதை இன்னும் ரகசியம்என கூறி மறைக்க முடியாது என பேசினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications