தமிழ் தீவிரவாதிகள் வெப்தளம் கிளப்பிய புயல்
டெல்லி:
தமிழ் தீவிரவாதிகளின் இன்டர் நெட் வெப் தளம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.,க. அ.தி.மு.க.எம்.பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
லோக் சபாவில், வியாக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பின்பு அ..தி.மு.க. எம்.பி. மலைச்சாமி தமிழ் தீவிர வாதிகள்வெப்தளம் குறித்து பிரச்னை எழுப்பினார்.
அவர் பேசுகையில், தமிழர் விடுதலைப் படை எனும் அமைப்பு இன்டர் நெட்டில் புதிய வெப் தளம்தொடங்கியுள்ளது. இதில் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் பல தென்னிந்திய பகுதிகளை இனைத்து அகண்டதமிழகம்உருவாக்கப்போவதாக அந்த வெப் தளத்தில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கும் படியும் அந்த வெப் தளத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.
இதற்கு டி.ஆர். பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுத்ததால் அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
சபாநாயகர் பாலயோகி தலையிட்டு இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரமோத் மகாஜன் பதிலளிக்கவேண்டும் என கூறினார்.
பிரமோத் மகாஜன் கூறுகையில், இது போன்ற பிரிவினைவாத வெப் தளத்தை தடை செய்வதற்கு நடவடிக்கைகள்எடுக்கப்படும். அதற்கான உயர் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.
தீவிரவாதிகள் வெப்தளம் சட்டவிரோதமானது என தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வெப் தளம் இந்தியாவிலிருந்து செயல்படுகிறதா? அல்லது வெளிநாட்டிலிருந்து செயல்படுகிறதா எனதெரியவில்லை.அந்த வெப் தளத்தையும் நான் பார்க்கவில்லை.
வெப் தள உரிமையாளர்களோடு ஆட்சியில் இருப்பவர்களை இணைத்து பார்க்கக்கூடாது. கம்ப்யூட்டர்குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பது எளிதானதல்ல.
வெப் தளம் குறித்து முன்னாள் பிரதமர் சந்திரசேகர் சபாநாயகரிடம் சில தஸ்தாவேஜுகளை புதன்கிழமைகொடுத்துள்ளார். அது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்யும் என்றார்.
இதன் பின் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பேசுகையில், மந்திரியின் பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை.சபாநாயகர் தகவல் தொழில்நுட்பத்துறை, உள்துறை மற்றும் புலனாய்வுத்துறையின் கூட்டுக் கூட்டத்தை உடனேகூட்டி எடுக்க வேண்டிய நடவடி,க்கை குறித்து விசாரிக்க வேண்டும்.
நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பான விஷயம் இது. எனவே அலட்சியப்போக்கு கைவிடப்படவேண்டும்.
மத்திய அரசு தேசிய பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ளதாக தெரியவிலலை. நான் கொடுத்ததஸ்தாவேஜுகளை சபாநாயகரிடமிருந்து மத்திய அரசு பெற்று தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வெப்தளத்தை பார்த்து வருவதால் இதை இன்னும் ரகசியம்என கூறி மறைக்க முடியாது என பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications