சவுதியில் நவாஸ் ஷெரீப்
துபாய்:
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரும்அவரது குடும்பத்தினரும் தனி விமானம் மூலம் சவுதி அரேபியா வந்தடைந்தனர்.
நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 19 பேரும் சேர்ந்து சவுதி அரச குடும்பத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில்ல சவுதிஅரேபியாவிலுள்ள ஜெட்டா நகருக்குச் சென்றனர்.
நவாஸின் பெற்றோர்கள், மனைவி குல்சும், இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள், சகோதரர்கள் சபாஷ் ஷெரீப், அப்பாஸ் ஷெரீப் அவர்களதுமனைவிகள், அவர்களது குழந்தைகள் மற்றும் மருமகன்கள் நாடு கடத்தப்பட்டனர்.
முன்னதாக, விமானக்கடத்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்களுக்காக நவாஷ் ஷெரீப் மேல் தேச துரோக வழக்குத் தொடரப்பட்டது. அவருக்குப்14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அவருக்கு ஊழல் குற்றச்சாட்டுக்களிலும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து நவாஷ் ஷெரீப் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவிநவாஸூக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் சவுதிஅரேபியாவுக்கு வந்து நவாஸ் சிகிச்சை பெறலாம் என்று சவுதி அரேபியா கூறியது. மேலும் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி ரபீக் தரார் தனது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்தார்.
அவரது சிறைத் தண்டனை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம், சொத்துக்கள் பறிமுதல், தேர்தலில்நிற்கத் தடை ஆகியவை தொடரும் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. இதையடுத்து நவாஸ் ஷெரீபும், அவரது குடும்பத்தாரும் ஞாயிற்றுக்கிழமைநாடுகடத்தப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.