வீரப்பன் காட்டுக்குள் எல்லைப் பாதுகாப்புப் படை
கோவை:
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவு கோவை வந்து சேர்ந்தது. இந்தப் படை வீரர்கள்சத்தியமங்கலத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். இவர்களது பணி இன்னும் இரண்டு நாட்களில் துவங்க உள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியை தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் நாடின. இதன் பலனாகமத்திய அரசு, எல்லைப் பாதுகாப்பு படையை அனுப்பி வருகிறது.
எல்லைப் பாதுகாப்பு பணியின் முதல் குழு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரிக்கு வந்து சேர்ந்தது. இந்தக் குழு மற்றவீரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறது.
கூடாரங்கள் அமைப்பது முதல் உணவுகளைத் தயார் செய்வது வரை அனைத்துப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொண்டுவருகிறது.
இதையடுத்து படை வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் 158 பெட்டிகளில் கேரளா எக்ஸ்பிரஸ் மூலம் ஈரோடு வந்து சேர்ந்தது.இந்த ஆயுதங்கள் அனைத்தும் பண்ணாரி முகாமுக்குள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
இந் நிலையில் சூலூர் விமானப் படைத் தளத்துக்கு சிறப்பு விமானம் மூவம் நேற்றிரவு எல்லைப் பாதுகாப்பு படையினர் வந்துசேர்ந்தனர். கஜராஜா என பெயரிடப்பட்ட விமானத்தில் முதல் கட்டமாக 184 படை வீரர்கள் வந்து சேர்ந்தனர்.
இவர்களை தமிழக அதிரடிப்படையின் 7 பஸ்களும், கர்நாடக அதிரடிப்படையின் 3 பஸ்களும் அழைத்துச் சென்றன.இப்படைக்கு எல்லைப் பாதுகாப்பு படை பிரிவின் டி.ஐ.ஜி பீட்டர் தலைமை ஏற்றுள்ளார்.
இவர்கள் அனைவரும் இன்று பண்ணாரிக்குச் சென்று இரண்டு நாட்கள் தாக்குதல் குறித்து திட்டமிடுகின்றனர். அதற்குள் இன்றும்நாளையும் மற்ற வீரர்கள் விமானம் மூலம் வந்து சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.