என்று ஒழியும் இந்த ஜாதிய மோகம் !
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் மாவட்டத்தில் டீக்கடையில் ஜாதிக்கேற்ப இரட்டை டம்பளர் முறையைக் கையாண்டவர் கைதுசெய்யப்பட்டார்.
தோகமலை என்ற ஊரையடுத்து உள்ளது கழுகூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (30). அப்பகுதியில் டீக்கடைநடத்தி வருகிறார். இவரது கடைக்கு கழுகூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் டீ குடிக்க வந்துள்ளார். இவர்தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
அப்போது, கருப்பையாவுக்கு ஒரு டம்பளரிலும், பிறருக்கு ஒரு டம்பளரிலும் தங்கராஜ் டீ கொடுத்துள்ளார்.இதையடுத்து கருப்பையா போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து தங்கராஜுவை, தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர் பின்னர்குளித்தலை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications