தேசிய நூலாகுமா திருக்குறள்?
மதுரை:
திருக்குறளை தேசிய நூலாக்குவதன் மூலம் தமிழுக்குப் பெருமை கிடைக்கும் என்றுகுன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, சாகித்திய அகாதெமி, திருக்குறள்பேரவை சார்பில் திருவள்ளுவர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் பொன்னம்பல அடிகளார் பேசுகையில், மனிதர்களுக்கு நீதியை வலியுறுத்திய ஒரேஇலக்கியம் திருக்குறள்தான். அதை தேசிய நூலாக்க எடுக்கப்படும் முயற்சிகள், குறளுக்குமட்டுமின்றி, தமிழுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.
திருவள்ளுவரை வெறும் மனிதராகப் பார்க்கக் கூடாது. அவரையும், திருக்குறளையும்வழிகாட்டியாகப் பார்க்க வேண்டும். அதுதான் வள்ளுவத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பேசிய குறள் பீடத் துணைத் தலைவர் தமிழண்ணல், தமில் வழியில் கல்விபோதனை அமைய வேண்டும். அப்போதுதான் ஒருவர் திருக்குறளைப் படிக்க முடியும்என்றார்.