60 சதவிகித இட ஒதுக்கீடு .. முஸ்லிம் பெண்கள் சபதம்
சென்னை:
பெண்களுக்கு அறுபது சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று ஒரு பெண்ணையே ஜனாதிபதியாகக்கொண்டு வருவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணித் தலைவியானபாத்திமா சாபர் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகக் கிளையின் மகளிர் அணித் தலைவியும், அப்துல்சமதுவின் மகளுமான பாத்திமா சாபர், பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட ரம்ஜான்நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சென்னையில் இம்பீரியல் ஹோட்டலில் நடத்தினார்.
இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மகளிர் கலந்து கொண்டு நோன்பு திறந்து கஞ்சிஉண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த.மா.கா எம்.பியான ஜெயந்தி நடராஜன் ஏழைபெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், துணிமணிகள் மற்றும் கல்வி உதவிப்பணம்ஆகியவற்றை விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கினார்.
விழாவில் பேசிய பாத்திமா சாபர், மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கவே தடைபோடுகிறார்கள். ஆனால் நாங்கள் வருங்காலத்தில் அறுபது சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுஒரு பெண்ணையே ஜனாதிபதியாகக் கொண்டு வருவோம் என்றார்.