For Daily Alerts
Just In
101 மணி நேர புத்தாண்டு இசை நிகழ்ச்சி
திருவனந்தபுரம்:
2001-வது ஆண்டு பிறப்பதையொட்டி பல இசை கலைஞர்கள் இணைந்து திருவனந்தபுரத்தில் 101 மணி நேரதொடர் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக இந்த மாணவியம் என்ற நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்திலுள்ளபல்வேறு கலாச்சார அமைப்புக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.
இந்த இசை நிகழ்ச்சிக்கு குருபரம்பரா என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல இசை சொற்பொழிவாற்றுபவர்கள்மற்றும் இசைக் கருவிகளை மீட்டுபவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
கே.ஜே.யேசுதாஸ், நெல்லை கிருஷ்ணமூர்த்தி, நெய்யாற்றங்கரை வாசுதேவன், பாரசாலை பொன்னம்மாள்,அனந்தலட்சுமி, வெங்கடராமன், ராமசாமி, டாக்டர் ஓமனக்குட்டி, கைதபுரம் தாமோதரன் நம்பூதிரி மற்றும் பலர்கலந்து கொள்கின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, December 11, 2000, 5:30 [IST]