கவுண்டர்கள் பேரணிக்கு வந்த 2 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோட்டில் நடந்த கவுண்டர் பேரவை பேரணியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டெம்போவேன் மோதி இறந்தனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் நல்ல குமாரம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சிவகுமார் (21) மற்றும் நல்லசிவம் (30).இவர்கள் இருவரும் ஈரோட்டில் நடந்த கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் பேரணியில் கலந்து கொள்ளமோட்டர் சைக்களில் வந்து கொண்டிருந்தனர்.

தாமரைக் குளம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது வாழைக்காய் டெம்போ ஒன்று அவர்கள் மீதுமோதியது. இந்த விபத்தில் சிவக்குமார் அதே இடத்தில் இறந்தார். நல்லசிவம் கோவை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் இறந்தார்.

கவுண்டர் பேரவை மாநாடு:

முன்னதாக, ஈரோட்டில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் 5 வது மாநில மாநாடு ஞாயிற்றுகிழமைநடந்தது.

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் 5 வது மாநில மாநாட்டையொட்டி பெரும் பேரணி நடந்தது. சிக்கய்யநாயக்கர் கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, சோலர் பிரிவில் முடிவடைந்தது. மாலை 4 மணிக்கு துவங்கியபேரணி இரவு 8. 30 மணிக்கு முடிந்தது.

ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள்பெருமளவில் பங்கேற்றனர்.

இந்தப் பேரணியின் போது கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் விவசாய விலை பொருட்களின் நிலையை சித்தரிக்கும் வகையில் பேனர்கள் எழுதிக் கொண்டு தொண்டர்கள்பேரணியில் கலந்து கொண்டனர். பேனர்களில் ஈரியோபைடால் காய்ந்த தென்னை மரம், பொதுமக்கள் வாங்கும்வகையில் கட்டுபடியான விலை ஆகியவை குறித்த வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

தீரன் சின்னமலை திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில், முன்னாள் எம்,பி., சி.கே குப்புசாமி, மாநில பொருளாளர்தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+