இலங்கையை நிர்பந்தியுங்கள் .. மத்திய அரசுக்கு நெடுமாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை ஏற்று சமாதானப் பேச்சுவார்த்தையை துவங்குமாறு இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனதமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுகேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அதன் அமைப்பாளர் நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டஅறிக்கை:
விடுதலைப் புலிகள் வெற்றி மேல் வெற்றி பெற்றுவரும் நிலையில் பிரபாகரன்தாமாகவே முன் வந்து சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளார். இதற்கு உலகின் பலநாடுகளும் வரவேற்பளித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தத்தை ஏற்க இலங்கை அரசுமறுத்துள்ளது.
அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய கடமைஇந்திய அரசுக்கு இருக்கிறது. இதற்கு இலங்கை சம்மதிக்காவிட்டால் ஐ.நா. சபையில்இந்த பிரச்சனையை எழுப்ப இந்திய அரசு முன் வரவேண்டும் என நெடுமாறன்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications