பாரபட்சம் காட்டுகிறது அரசு ..ராஜகோபாலன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

மதப் பிரச்னையில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. எந்த மதமானாலும் பிரச்னையைசமமாகப் பாவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணித்அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

சத்தியமங்கலத்தில் மினார் சேதப்படுத்திய வழக்கில் இந்து முன்னணியினரை அரசுகைது செய்துள்ளது. இந்த சம்பவத்தில் இந்து முன்னணியினர் 5 பேரை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்துள்ளனர்.

அதேசமயம், தாராபுரத்தில் விநாயகர் சிலையை உடைத்து, செருப்பு மாலை போட்டுஅவமானப் படுத்தியதில் இருவரை மட்டும் கைது செய்துள்ளனர். இவர்களை சாதாரணசட்டப் பிரிவுகளின் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் ஜாமீனில் கூட எளிதில்வெளியே வரமுடியும்.

மேலப்பாளையம், தாராபுரம், சீர்காழி போன்ற இடங்களில் கடவுள் மீது தொடர்ந்துதாக்குதல் நடந்து வருகிறது. ஆனால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்காமல்காலதாமதம் செய்து வருகிறது.

இது போன்ற தாக்குதல்கள் பெரும் சதித் திட்டத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்ததாக்குதலுக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் இடையே பெரும்தொடர்பு உள்ளது என அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+