பிரதமர் ஓய்வெடுக்கும் கேரள மாவட்டத்தில் நிலநடுக்கம்
கோட்டயம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை சிறு நிலநடுக்கம்ஏற்பட்டது.
பிரதமர் வாஜ்பாய் கோட்டயத்திற்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குமரோகத்தில் ஓய்வு எடுத்துவருகிறார். இந்நிலையில் கோட்டயம் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பிரதமரின் பாதுகாப்பு குறித்தகவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயத்தில் புதன்கிழமை இரண்டு முறை சிறு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 2.5 எனபதவாகி இருந்தது என அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவியியல் ஆய்வாளர்கள் மேலும் இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.கேரளாவில் டிசம்பர் 12-ம் தேதிக்கு பின் ஏற்பட்டுள்ள 5-வது நிலநடுக்கம் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டயம் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதி இல்லை என்றாலும், கோட்டயத்திற்கு அருகில்இருக்கம் இடுக்கியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். டிசம்பர் 12-ம் தேதி அங்கு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர்அளவு கோலில் 5 என பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.