For Daily Alerts
Just In
விரிவாக்கம் செய்யப்படுகிறது திருச்சி பஸ் நிலையம்
திருச்சி:
திருச்சியிலுள்ள சிந்தாமணி பஸ் நிலையத்தை விரிவு படுத்து அரசு திட்டமிட்டுள்ளதாக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.நேருவெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தெப்பக்குளத்தில் படகு சவாரியைத் துவக்கி வைத்துப் பேசுகையில், திருச்சி சிந்தாமணி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த அரசுதிட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ 12.5 கோடி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக திருச்சி மாநகராட்சி பகுதியில் நலத்திட்டங்களுக்காக ரூ 350 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாநில அரசு கழிவுநீர் சுத்தப்படுத்தும்திட்டத்திற்காக ரூ 120 கோடியை ஒதுக்கியுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 25, 2000, 5:30 [IST]