3 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை
களியக்காவிளை (கன்னியாகுமரி):
கன்னியாகுமரி மாவட்டம் தெற்றக்குழி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக தன் 3 குழந்தைகளையும் தீவைத்துக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தெற்றக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் நெல்சன் (35). கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி (32). இவர்களுக்குகிங்ஸ்லி (10), ஜெயப்பிரியா (9), ஜெய்சிங் (4) ஆகிய 3 குழந்தைகள் இருந்தன.
திருமணமான புதிதில் சந்தோஷமாக இருந்த நெல்சனுக்கும், மேரிக்கும் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கடந்தகிறிஸ்துமஸ் தினத்தன்று நெல்சன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, மேரியை அடித்து விட்டு, நெல்சன் தனது 3 குழந்தைகளும் இருந்த அறைக்குள் சென்றார். அறைக்கதவை உள்பக்கமாகத் தாழிட்டு விட்டு,தன் குழந்தைகள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றித் தன் மேலும் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.