போலீசுக்கு "டீ கொடுத்த கைதி
சேலம்:
போலீசாரைத் தள்ளி விட்டு, கைவிலங்குடன் தப்பி ஓடிய மும்பைக் கைதியைப்போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பையில் பல இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக்கொள்ளையடித்து, போலீசுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த ஒரு திருடனை போலீசார்கைது செய்தனர்.
மும்பையில் கைது செய்யப்பட்ட அவர், கொள்ளையடித்த பொருட்களைச் சேலத்தில்பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, போலீசைத் திசை திருப்பினார். இதையடுத்து வகோலாபகுதியைச் சேர்ந்த விஜய் ராம்ஜி (24) என்ற அந்த இளைஞரை அழைத்துக் கொண்டுமும்பை போலீஸார் சேலத்திற்கு வந்தனர்.
எப்படியும் தப்பி விடுவார் என எண்ணிய போலீசார் முன் ஜாக்கிரதையாக கைவிலங்குடன் கொண்டு வந்தனர். ரயிலில் அதிகாலையில் சேலம் வந்திறங்கியஇவர்கள், அம்மாபேட்டையில் உள்ள ஒரு கடையில் டீ குடிக்கச் சென்றனர்.
போலீசார் மும்முரமாக டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி ராம்ஜி கைவிலங்குடன் தப்பி விட்டார். போலீசார் எவ்வளது துரத்தியும்"வழக்கம்போல பிடிக்க முடியாமல் தோல்வி முகத்துடன் திரும்பினர்.
மும்பையில் கைது செய்து, சேலத்தில் தப்பவிட்ட அவர்கள் செய்வதறியாது உள்ளூர்போலீசில் புகார் செய்தனர். தப்பிய கைதியை சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனர்.