For Daily Alerts
Just In
வேன்-லாரி மோதலில் 5 பேர் சாவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வேனும், லாரியும் மோதிக் கொண்டதில் 5 பேர் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.
தந்தளம் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் இறந்தவர்கள் வேன் ஒன்றில் ஆரணியிலிருந்துசென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். லாரி, சென்னை கோயம்பேட்டிலிருந்து, வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
தந்தளம் வந்தபோது, இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பெண்கள் உள்பட 5 பேர்நசுங்கி இறந்தனர். 12 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் ஸ்ரீபெரும்புதூர் மருத்துமவமனையில்அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்துதடைபட்டது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 25, 2000, 5:30 [IST]