கோல்ட் ஃபிளேக் டென்னிஸ் போட்டி: லியாண்டர் தோல்வி
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் ஏ.டி.பி கோல்ட் ஃபிளேக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின்லியாண்டர் பயஸ் தோல்வியடைந்தார்.
சென்னையில் நடந்து வரும் ஏடிபி கோல்ட் ஃபிளேக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல வீரர்கள் அதிர்ச்சிதோல்வி அடைந்தனர். இந்தியாவின் லியாண்டர் பயஸ், டோமி ரொபோர்டோவிடம் நேர் செட்களில்தோல்வியடைந்தார்.
லியாண்டர் பயஸ் முதல் செட்டின் டை பிரேக்கரில் தோல்வியடைந்தவுடன் கோபமடைந்து தனது மட்டையைதரையில் தூக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார்.
இது போல் விளையாட்டு வீர்ரகள் நடந்து கொள்வது விதி முறைகளுக்கு புறம்பானது. அதை நடுவர்கள்கண்டிப்பார்கள். ஆனால் பயசின் நடவடிக்கையை நடுவர்கள் கண்டிகக்காதது அவரது அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.
சிறு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கியது ஆனாலும் வெற்றி காற்று ரொபோர்டோ பக்கமே வீசியது.ரோபார்டோ ஆட்டத்தின் பெரும்பகுதியை பேஸ்லைனியே கவனம் செலுத்தி விளையாடி லியாண்டர் பயசைவென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தோல்வியை குறித்து பயஸ் கூறியதாவது:
ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தாததே தோல்விக்கு காரணம். நான் முதல் செட்டை டை பிரேக்கரில்தோற்றவுடனேயே அடுத்த செட்களில் வென்று விடவேண்டும் என்ற முயற்சியில் விளையாடத் துவங்கினேன்.ஆனால் ரொபோர்டோ என்னை விட சிறப்பாக ஆடினார் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications