புதுவையில் நெசவுத் தொழிலாளர்களுக்கு இலவச இயந்திரம்
பாண்டிச்சேரி:
நெசவுத் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு 50 நெசவு நெய்யும் இயந்திரங்களை இலவசமாக வழங்க பாண்டிச்சேரி காதி மற்றும் கிராம தொழில்மையத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
பாண்டிச்சேரியில் காதி 2001 என்ற கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக அடுத்த வாரம் 25பேருக்கு சர்க்காஸ் என்றழைக்கப்படும் நெசவு இயந்திரங்கள் வழங்கப்படும். அதற்குப்பின் மேலும் 25 பேருக்கு இயந்திரங்கள் வழங்கப்படும்.
காதி தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு திருநாவுக்கரசு, எம்.பி. ரூ 56 லட்சம் வரை அவரது தொகுதியில் செலவழித்துள்ளார்.
மேலும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடையும் விதத்தில் அவர்களுக்கு வங்கி மூலம் கடன்வசதி அளித்து தொழில்தொடங்கவும் பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காதி ஆடைகளுக்கு கேரளாவில் அதிக மவுசு இருப்பதால் ஜனவரி 22 ம் தேதி அங்கும் இதே போன்று காதி 2000 என்ற கண்காட்சிநடத்தப்படவுள்ளது.
யு.என்.ஐ.