அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.
டெல்லி:
இந்தியாவின் நீண்ட தூர ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது.
இது பற்றி டெல்லியில் நடந்து வரும் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த விண்வெளி ஆராய்ச்சிகமிஷன் தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறியிருப்பதாவது:
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 1999-ம் ஆண்டே விண்னில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு முறைதடங்கல் ஏற்பட்டதால் அப்போது எடுத்த முயற்சிகள் தடைபட்டன.
இப்போது மீண்டும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ராக்கெட்டுடன் கிராம்சாட்-1 என்றசெயற்கைக்கோள் இணைத்து அனுப்பப்பட இருக்கிறது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் 2,000 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக் கோளை இணைத்து பூயிலிருந்து36,000 கிலோமீட்டர் தொலைவு வரை அனுப்ப முடியும்.
இது போல் விண்னில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் சிறப்பாக செயலாற்றும் திறமை உடையதாகஇருக்கும். உயர் ஆராய்ச்சி பிரிவு செயற்கைகோள்களை இவ்வளவு தூரத்திற்கு செலுத்தினால்தான் பயனுடையதாகஇருக்கும்.
இப்போது அனுப்பப்படும் ராக்கெட்டுடன் அனுப்பப்படவிருக்கும் செயற்கைக்கோள் 1,500 கிலோ எடைகொண்டது என கூறினார்.












Click it and Unblock the Notifications