படகு மீது தாக்குதல்: 2 கடற்புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் உள்ள முகமலை வெட்டிலைக்கேரணியில் விடுதலைப் புலிகள் சென்று கொண்டிருந்த படகை கடற்படை வீரர்கள் தகர்த்தனர். இதில் இரண்டுகடற் புலிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடற்படை வீரர்கள் அமைத்துள்ள முகாம் அருகே கடலில் கடற்புலிகள் சென்று கொண்டிருந்தனர்.வெட்டிலைக்கேரணி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது கடற்படை வீரர்கள் அவர்கள் வந்த படகை தகர்த்தனர்.
இந்தச் சம்பவத்தில் எத்தனை புலிகள் கொல்லப்பட்டனர் என்று தெரியவில்லை. 2 கடற்புலிகள் இறந்தனர் என்று உறுதியாகக் கூற முடியும்.
முன்னதாக, அய்யநாரை பகுதியில் புலிகள் மோர்ட்டார் வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications