திருச்சியில் தங்கம் வென்ற மங்கைகள்
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 398 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்வழங்கினார் தமிழக ஆளுநர் ஃபாத்திமா பீவி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது. விழாவில் பல்வேறுபாடங்களில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 39 மாணவ,மாணவிகளுக்கு தங்க பதக்கமும், பல்வேறு பாடங்களில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு ம் பட்டம் வழங்கினார் ஆளுநர்.
தங்கப் பதக்கம் வழங்கியவர்களில் 39 பேரில் 22 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்தஙகப்பதக்கம் வென்ற 39 பேரில் 18 மாணவ மாணவியர் திருச்சி கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பட்டமளிப்பு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மாரியப்பன் அறிக்கை சமர்ப்பித்தார். மத்திய அரசின்அறிவியல் தொழில்நுட்ப செயலாளர் பேராசியர் ராமமூர்த்தி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் அயோத்தி.மாவட்ட ஆட்சித்தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பல கல்லூரியைச் சேர்ந்த பேராசியர்களும் பட்டமளிபபு விழாவில்பங்கு கொண்டனர்.












Click it and Unblock the Notifications