செஸ் விளையாட்டுக்கு அதிக ஸ்பான்ஸர்: ஆனந்த் பரவசம்
சென்னை:
பல தொழில் நிறுவனங்கள் செஸ் விளையாட்டுக்கு ஸ்பான்ஸர் செய்ய முன்வருவது என்னை மிகவும்மகிழ்ச்சியடைய வைக்கிறது என்று கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
ஆனந்தின் முக்கிய ஸ்பான்ஸரான என்.ஐ.ஐ.டி. சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ஆனந்த் கூறியதாவது:
தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் செஸ் வீரர்களையும், செஸ் போட்டிகளையும் ஸ்பான்ஸர் செய்கின்றன.இது மேலும் வளர்ந்தால் இந்தியாவில் செஸ் விளையாட்டு மேலும் வளர வாய்ப்புள்ளது.
மேலும் வர்ணனைகள், தொலைக்காட்சியில் விளையாட்டை ஒளிபரப்புவது போன்றவை ஏற்பட்டுள்ளதால், செஸ்அதிக அளவில் பிரபலமாகி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக செஸ் விளையாட்டு இந்தியாவில் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. உலகசாம்பியன் ஆகி விட்டதால் என்னிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். இதனால் எனது ஆட்டத்தை பாதிக்காதவகையில் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். செஸ் அகாடமியைக் கண்டிப்பாகத்தொடங்குவேன் என்றார் ஆனந்த்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications