For Daily Alerts
Just In
நுழைவுத் தேர்வில் மாற்றம் இல்லை: கருணாநிதி
சென்னை:
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்த்தப்படவில்லை. நெகடிவ்மார்க்கும் கிடையாது என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வில் தவறானபதிலுக்கு மார்க் குறைக்கப்படும் எனவும், நுழைவுத் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்வெளிவந்தன. இதை முதல்வர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவ மற்றும் பொறியியற் கல்லூரி நுழைவுக் தேர்வு கட்டணம் ரூ 400-லிருந்து ரூ 500 ஆகஉயர்த்தப்பட்டுள்ளதாகவும், தவறான பதிலுக்கு மார்க் குறைக்கப்படும் எனவும் பத்திரிக்கைகளில் செய்தவெளிவந்துள்ளது. இது தவறான செய்தி. நுழைவுத் தேர்வுகளில் இது வரை கடைபிடிக்கப்பட்ட முறையேகடைபிடிக்கப்படும் என கூறியுள்ளார்.
Story first published: Sunday, January 7, 2001, 5:30 [IST]