For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோல்டு ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டி: இந்தியா தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோல்டு ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி இறதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பை இழந்தனர்.

சென்னையில் கோல்டு ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதலில் நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர். இதையடுத்து இரட்டையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடியினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

இவர்களும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக சிறப்பாக விளையாடி வந்தனர்.

இந்நிலையில் அரை இறுதிப் போட்டிபரபரப்பான சூழ்நிலையில் சனிக்கிழமை துவங்கியது. பயஸ் ஜ- பூபதி ஜோடி அரை இறுதி போட்டியில் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் அதிக அளவில் ஆவலுடன் கூடியிருந்தனர்.

இந்திய ஜோடி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோவன் மற்றும் இத்தாலியச் சேர்ந்த நவ்ராவுடன் மோதினர். இந்த போட்டி 2 மணி நேரம் நீடித்தது.

இறுதியில் இந்திய ஜோடி 6-2,6-7 (8-6), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வி ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களைஅதிரச்சி அடைய வைத்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X