தமிழக காங்.தலைவராக இளங்கோவன் மீண்டும் தேர்வு
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கோவன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
மற்ற கட்சிகளைப் போல எங்கள் கட்சியும் ஆட்சியில் பங்கேற்க விரும்புகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை கூட்டணி அமைக்கும் முன்புஒரு நிபந்தனையாக விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் எல்லா விஷயங்களும் தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டு விடும்.
காங்கிரஸ் கட்சி அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மதச்சார்பற்ற கூட்டணி தலைவியாக ஏற்றுக் கொண்டுள்ளது. இது வரவிருக்கும்தேர்தலுக்கும் பொருந்தும்.
அகில இந்திய காங்கிரசும், தமிழ் மாநில காங்கிரசும் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என கூறி வந்தன. ஆனால் அதை ஜெயலலிதா மறுத்துதமிழகத்தில் அ.தி.மு.க. தனித்தே ஆட்சியமைக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.