மனைவி வர மறுப்பு .. மகனுடன் கணவர் தற்கொலை
ஊட்டி:
குடும்பம் நடத்த வர மனைவி மறுத்ததால், மகனுக்கு விஷத்தைக் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்தந்தை.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள கெந்தாரை அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (30).இவரது மனைவி நஞ்சம்மாள் (22). இருவரும் கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு நாகமணி (4), சசிகலா (6) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.கணவனுடன் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் நஞ்சம்மாள் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.
அவரை குடும்பம் நடத்த வருமாறு ராமச்சந்திரன் வற்புறுத்தினார். ஆனால் மனைவி வராததால், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையடுத்து குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். குழந்தைகளின்தின்பண்டத்தில் விஷத்தை கலந்து கொடுத்தார்.
பின்னர் அதனை அவரும் தின்றார். இதில் ராமச்சந்திரன், மகன் நாகமணி இருவரும் இறந்தனர். குழந்தை சசிகலாமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.