அதிரடிப்படையால் கிராம மக்களுக்குத் தொல்லை?

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

வீரப்பனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸாரால் சத்யமங்கலம் அருகே கொளச்சல் பகுதியில் உள்ள மக்களுக்கு தொல்லைஏற்பட்டுள்ளதால் அவர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.

கொளத்தூரை அடுத்து உள்ளது பெரியதண்டா கிராமம். இங்கு லம்பாடி இன மக்கள் வசித்து வருகிறார்கள்.

போலீஸார் கடந்த வாரம் நாயக்கன்தண்டாவைச் சேர்ந்த லாரி டிரைவர் சங்கர் என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காகசங்கரைப் பிடித்துச் சென்ற போலீஸார் அவரை பவானி நீதிமன்றத்தில் காவல் வைத்துள்ளனராம்.

போலீஸார் அடிக்கடி இங்குள்ள ஆட்களைப் பிடித்துச் செல்வதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. போலீஸாரால் தொல்லை வரலாம் என்று இங்குவாழும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து லம்பாடி பஞ்சாரா சேவா சங்க மாவட்டத் தலைவர் பீமன் கூறுகையில், அதிரடிப்படையால் கிராம மக்களுக்குத் தொல்லை ஏற்படாது எனஅரசும், அதிரடிப்படை அதிகாரிகளும் அறிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் எங்கள் கிராமத்தில் போலீஸார் வந்து ஆட்களைப் பிடித்துச் செல்வதைப் பார்க்கும் போது மீண்டும் பழைய நிலை ஏற்படலாமோ என்றுதெரிகிறது என்றார்.

அதிரடிப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பதால் வனப்பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்களும், விறகு வெட்டிகளும் காட்டுக்குள் செல்வதில்லை.அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகளையும் அதிரடிப்படையினர் அடித்துக் கொன்றனர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் இங்கு வாழும்கிராம மக்கள் இங்கிருந்து வெளியேறவும் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+