"முஷாரப்பை இந்தியா அழைக்கவில்லை

Subscribe to Oneindia Tamil

பாலி (இந்தோனேசியா):

இந்தியாவுக்கு வருமாறு பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப்புக்கு இந்தியா அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என்றுமத்திய அரசு கூறியுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா அழைத்துள்ளதாகவும், இதை ஏற்று முஷாரப்இந்தியா செல்கிறார் என்றும் பாகிஸ்தான் தரப்பில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது.

இதை இந்தியா மறுத்துள்ளது. அப்படி எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகதெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் வாஜ்பாய் தற்போது ஜகார்தாஅருகேயுள்ள பாலி தீவில் ஓய்வெடுத்து வருகிறார்.

வாஜ்பாயுடன் சென்றுள்ள பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா பாகிஸ்தான் செய்தி குறித்துக்கூறுகையில், இந்தியாவுக்கு வருமாறு முஷாரப்புக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. இப்போதைக்குஅம்மாதிரியான திட்டம் ஏதுமில்லை.

செங்கோட்டையில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, பிரதமர் அலுவலகத்தை குண்டுவைத்து தகர்ப்போம்என்று பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா அமைப்பு மிரட்டியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் அரசு எந்தவிதபதிலும் தெரிவிக்கவில்லை. இவற்றை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று முஷாரப் கூறியுள்ளார்.

முஷாரப் இவ்வாறு கூறியது வருத்தம் தருகிறது. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் இப்போதைக்குபேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றார் மிஸ்ரா.

வாஜ்பாயும் இதேபோன்ற கருத்தையே தெரிவித்தார். எனவே, தவறான நோக்கத்துடன் பாகிஸ்தான் தரப்பில்முஷாரப் இந்திய வருகிறார் என்ற செய்தி பரப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+