ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் தாக்குதல் - 11 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்திற்குள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 6 தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் இறந்தனர். 8சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமுற்றனர்.
பிற்பகல் 3.40 மணியளவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் கும்பல்ஒன்று விமான நிலையத்திற்குள் கிரனேட் குண்டுகளை வீசியது. சரமாரியாகவும் அவர்கள் சுடத்துவங்கினர். பலத்தபாதுகாப்பில் இருக்கும் விமான நிலையம் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் பார்த்தபாதுகாப்புப் படை வீரர்கள், தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலின்போது, விமான நிலையத்தின் முதல் கேட் வழியாக தீவிரவாதிகள் விமான நிலையத்திற்கு உள்ளேநுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் சரமாரியாக சுட்டனர். இந்த மோதல் 50நிமிடங்கள் தொடர்ந்தது.
இந்த மோதலின்போது விமான நிலையத்திற்குள் இருந்த விமானங்களுக்கும், பயணிகளுக்கும் எந்தவிதமானபாதிப்பும் ஏற்படவில்லை.
போலீஸ் உடையில் வந்தனர்:
டெல்லியில் அரசுச் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மோதலின்போது விமான நிலையத்திற்குள், இரண்டுபயணிகள் விமானங்கள் நின்று கொண்டிருந்தன. அவை இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ்நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.
போலீஸ் உடையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். மாருதிகாரில் அவர்கள் வந்திருந்தனர். முதலில் கிரனேட் வெடிகுண்டுகளை அவர்கள் வீசினர். பின்னர் சுடத் துவங்கினர்.இதைத் தொடர்ந்து விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள்தீவீரவாதிகளின் முயற்சியைத் தடுத்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் எட்டு வீரர்கள் காயமடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.பொதுமக்களில் 2 பேரும், மூன்று பாதுகாப்புப் படை வீரர்களும் இறந்தனர். 2 தீவிரவாதிகள் தப்பி விட்டனர்.காயமடைந்தவர்களில் நான்கு பேர் பெண் காவலர்கள். அனைவரும் விமானப்படை மற்றும் போலீஸ் தலைமையகமருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்திற்குப் பின் தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் போனில்தகவல் தெரிவித்தனர். தாக்குதலில் அபு அப்துல்லா தாரிக், அபு ஹம்ஸா, அபு ஒசாமா, அபு குபாப், அபு அப்துல்லாசயார், அபு அப்துல்லா ஆகியோர் பங்கெடுத்ததாகவும் அந்த அனாமதேய போன் தகவல் தெரிவித்தது.
தொடரும் தாக்குதல்கள்:
கடந்த மாதம் டெல்லி செங்கோட்டை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை,ராணுவ உடையில் வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்து கொண்டநிகழ்ச்சியில் இதே அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், குண்டு வீசினர். இதில் பரூக் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
தற்போது பலத்த பாதுகாப்புக்கிடையே உள்ள விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கியுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
யு.என்.ஐ.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications