தேதியில் குழப்பம் .. எப்போது சட்டசபைத் தேர்தல்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழ்நாடு, பாண்டிச்சேரி கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின்தேர்தல்களை ஏப்ரல் மாதம் நடத்த இப்போது தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா,மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலசட்டசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இதில் தமிழகசட்டசபையின் பதவிக் காலம் மே மாதம் 11-ம் தேதி முடிவடைகிறது. மற்ற மாநிலஅரசுகளின் பதவிக் காலம் ஜுன் மாதம் முடிவடைகின்றன.

மாநில அரசுகளின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வாரங்கள் முன்பே தேர்தல்களைமுடிக்க வேண்டுமென்பது தேர்தல் கமிஷன் பின்பற்றி வரும் சம்பிரதாயம். இதன்படிதமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களை மே மாதம் நடத்தப்படும் எனஎதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே தேர்தல் கமிஷனும் கூறி வந்தது.

மத்திய தேர்தல் கமிஷனர் கில் சென்ற மாதம் நிருபர்களை சந்தித்த போது 5மாநலங்களுக்கும் தேர்தல் ஒரே சமயத்தில் நடத்தப்படும். ஏனென்றால் ஒருமாநிலத்தின் தேர்தல் முடிவு அடுத்த மாநிலத்தில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது.

இதுபோல, முன்பும் கூட பல மாநிலங்களில் ஒரே சமயத்தில் தேர்தல்நடத்தப்பட்டுள்ளது. சட்டசபையின் பதவிக்காலம் முடியுமுன் தேர்தல் நடத்தப்படவேண்டும் என கூறினார்.

இந்நிலையில், பதவிக்காலம் முடியும் 5 மாநிலங்களிலும் ஏப்ரல் மாதத்தில் தேர்தலைநடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. இதை தேர்தல் கமிஷன்வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

இந்த தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன்காரணமாக தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகும். தேர்தல் ஆணையத்திடம் 1லட்சத்து 50 ஆயிரம் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் இருக்கின்றன.

மேலும் 1 லட்சுத்து 50 ஆயிரம் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களை தயாரிக்க ரூ 150கோடி செலவில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருக்கும் பொதுத் துறைநிறவனங்களிடம் தேர்தல் கமிஷன் ஆர்டர் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+