புலிகளுக்கு பண உதவியா? ..17 நாடுகளுக்கு இந்தியா கடிதம்
டெல்லி:
விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் நிதி வசூல் செய்யும் நாடுகளுக்கு, அவர்களுக்குஎவ்வாறு பண உதவி கிடைக்கிறது என்பது குறித்து விவரம் அளிக்கும்படி இந்தியாசார்பில் கடிதம் அனுபப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு, பலவெளி நாடுகளிலிருந்து நிதி கிடைத்து வருகிறது. இந்த இயக்கத்திற்கு அந்நாடுகளில்எவ்வாறு நிதி வசூல் செய்யப்படுகிறது என தெரிவிக்குமாறு அந் நாடுகளை இந்தியாகேட்டுக் கொண்டுள்ளது என சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் திங்கள் கிழமை கூறியதாவது:
ராஜீவ்காந்தி படுகொலையில் தொடர்பு கொண்டிருந்த விடுதலை புலிகளுக்குசுவிட்ஸர்லாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை, ஜெர்மனி உள்ளிட்ட 17நாடுகளில் எவ்வாறு அவர்கள் பண வசூல் கிடைக்கிறது என தெரிவிக்குமாறு அந்தநாடுகளுக்கு கடிதம் அனுப்பப்ட்டிருக்கிறது.
ஜெயின் கமிஷன் முடிவின்படி தொடங்கப்பட்ட பல்துறை ஒழுங்கு கண்காணிப்புஅமைப்பு தன் பணியை செவ்வனே செய்து வருகிறது. அந்த அமைப்பு இலங்கைக்கும்சென்று விசாரணை நடத்தியது. பிரபாகரனை பிடித்து தருமாறு இலங்கை அரசிடம்கோரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
பங்குச்சந்தை தொடர்பாக வழக்குகளை, அதிலும் குறிப்பாக இந்தியன் வங்கி ஊழல்தொடர்பான வழக்குகளை விரைவில் விசாரித்து முடிவுக்கு கொண்டுவர சிறப்புநீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன என கூறினார்.