காதலித்தது 3 பெண்களை .. மணந்தது 4-வது பெண்ணை
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
வங்கதேசத்தில் மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றி 4 வதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முயன்ற பள்ளி ஆசிரியரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
தலைநகர் டாக்காவின் தென்பகுதியிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாரிசல் மாவட்டம். இங்குள்ள பள்ளி ஒன்றில் வேலை செய்து வந்தவர்ஜாகிர் உசேன் சிக்தர் (28).
இவர் ஒரே நேரத்தில் 4 பெண்களைக் காதலித்திருக்கிறார். இது நான்கு பேருக்குமே தெரியாது. இந்நிலையில் அவர் தான் காதலித்த 4 பெண்களில் ஒருவரைத்திருமணம் செய்து கொள்வது, 3 பெண்களை கழற்றி விடுவது என தீர்மானித்தார்.
அதன்படி அவர்களில் ஒருவரைத் திருமணம் செய்ய முயன்றார். இதைத் தெரிந்து கொண்ட பிற 3 பெண்களும் உடனடியாக அகல்காரா டவுன் போலீசில் புகார்கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து, சினிமா பாணியில் தலையிட்டு, ஜாகீர் உசேனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications