For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 1000 கோடியில் கிராம வளர்ச்சித் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ரூ. 1000 கோடி மதிப்பில், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களில், அந்த வசதியை ஏற்படுத்த சேவா என்ற சமூக சேவை நிறுவனம்திட்டமிட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனக்கட்டி சுவாமி தயானந்த ஆசிரமத்தில் சேவா சமூக சேவை நிறுவனச் சேர்மன் வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறுகையில்,கிராமங்களில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதை சேவா சமூக சேவை நிறுவனம் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். இந்தப் பணத்தை வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். சேவா செயற்குழுக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேவா, அமைப்பு டெல்லியில் துவக்கப்பட்டது. இதில் பல்வேறு இந்து மடாதிபதிகள் இடம் பெற்றுள்ளனர். கிராமப்புறமக்களுக்கு சேவை செய்வ, சேவா அமைப்பு தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

சேவா என்ற சமூக சேவை அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் 20 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து நலத்திட்டங்களை செயல்டுத்துவது எனவும்தீர்மானித்துள்ளது.

இதற்காக ரூ 1000 கோடி செலவிடுவது என சேவா திட்டமிட்டுள்ளது. இதற்காக வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டோம்.

கோவை, தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில், ஜனவரி 30 ம் தேதி முதல் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் எந்தெந்தகிராமங்களில் அடிப்படை வசதிகளைச் செய்வது, எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து அப்போது விவாதிக்கப்படும் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X