தர்மபுரியில் செசன்ஸ் நீதிமன்றம் .. அரசு உத்தரவு
சென்னை:
தர்மபுரியில், கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில சட்டசபையில், சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா திங்கள்கிழமைவெளியிட்டார். எம்.எல்.ஏக்கள் மனோகரன் (திமுக), ஜி.கே.மணி (பா.ம.க), ஞானசேகரன் (த.மா.கா) ஆகியோர்இதுதொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். தர்மபுரியில், கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் கோரிவக்கீல்களும், பிற தரப்பினரும் போராடி வருகின்றனர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அரசுஉத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்து அமைச்சர் ஆலடி அருணா பேசுகையில், தர்மபுரியில் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம்அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு எடுத்து வருகிறது. உயர்நீதிமன்றத்தின்ஒத்துழைப்புடன் இது அமைக்கப்படும்.
நீதிமன்றம் அமைப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.