பாக்.குடன் ஹாக்கி விளையாட இந்தியாவுக்கு அனுமதி
துபாய்:
துபாயில் நடைபெறவிருக்கும் ஹாக்கி போட்டியில் விளையாட இந்தியாவும்,பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன என போட்டியின் அமைப்பாளர்கள்கூறியுள்ளனர்.
மே மாதம் துபாயில் ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் பாகிஸ்தானும்பங்கு பெறுகிறது. இந்திய அரசு, பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்தைதொடர்ந்து வருவதால் பாகிஸ்தானுடன் விளையாட்டு போட்டிகளில் விளையாடாதுஎன கூறியிருந்தது. எனவே இந்த போட்டியில் இந்தியா பங்கேற்பது சந்தேகமாகஇருந்தது.
இந்நிலையில் துபாயில் நடக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட்வீரர்களுக்கு உதவும் கழகம் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டியில் பங்கேற்பதைஉறுதி செய்துள்ளன என தெரிவித்துள்ளது.
இது குறித்து இக் கழகத்தின் தலைவர் ஷகிட் நூரானி கூறியதாவது:
இந்தியாவும், பாகிஸ்தானும் ஹாக்கி போட்டியில் பங்கேற்கின்றன. ஆனால் மற்றநாடுகளிமிருந்து இதுவரை எந்த விதமான தகவலும் வரவில்லை. விரைவில் மற்றநாடுகளிடமிருந்து ஒப்புதலை எதிர்பார்க்கிறோம்.
இந்த போட்டியை 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியாக நடத்துவதா அல்லது 4 நாடுகள்பங்கேற்கும் போட்டியாக நடத்துவதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
போட்டிக்கான ஆடுகளத்தை அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. போட்டி துவங்கும் முன் ஆடுகளம் தயாராக இருக்கும் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications